மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலிப் பொலிஸார் வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்து தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களுடனும் பொலிஸார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வைத்தியசாலை வட்டாரத்தால் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சுன்னாகம் பகுதிநோக்கி உந்துருளியில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் உந்துருளியைச் செலுத்திச் சென்றதோடு வீதியில் பயணித்த பெண் ஆசிரியர் ஒருவரையும் மோதித்தள்ளினர்.
இதன்போது வீழ்ந்த இரு பொலிசாரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சமயம் இருவரும் போதையின் உச்சத்தில் வைத்தியசாலையில் இருந்த அலுவலர்களுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு பணிபுரியும் சிங்களமொழி தாதியர்கள் உதவ முற்பட்டபோதும் அவர்களையும் தகாத வார்த்தைகளால் ஏசியதால் குறித்த தாதியர்களும் ஒதுங்கிக் கொண்டனர். இந்த விடயம் வைத்தியசாலையின் பணிப்பாளரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM