அடுத்த சுற்றை உறுதிசெய்யும் முனைப்பில் ஐதராபாத் சன்ரைசர்ஸுடன் மோதும் சென்னை 

Published By: Priyatharshan

17 Apr, 2019 | 03:55 PM
image

ஐ.பி.எல். 12 தொடரின் 32 ஆவது போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி சென்னை அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் இடம்பெறவுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் ஒரு போட்டியில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

இதுவரை இரு அணிகளும் 10 முறை நேருக்குநேர் மோதியுள்ள நிலையில், இரு போட்டிகளில் ஐதராபாத் அணியும் 8 போட்டிகளில் சென்னை அணியும் வெற்றிபெற்றுள்ளன.

அனுபவம் வாய்ந்த சென்னை அணி, டோனியின் தலைமைத்துவத்தில் வியப்புக்குரிய வகையில் விளையாடி வருகிறது. 

கடந்த இரு ஆட்டங்களில் அதாவது ராஜஸ்தான் (24–4) மற்றும் கொல்கத்தாவுக்கு (81–4) எதிராக முதல் 4 விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்தாலும் பின்வரிசை ஆட்டக்காரர்கள் அணியை தூக்கி நிறுத்தி வெற்றி பெற வைத்தனர். 

இதே போல் பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் பக்கபலமாக இருக்கிறார். அவர் சராசரியாக ஓவருக்கு 5.76 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டியிருப்பதுடன், மொத்தம் 13 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். 

சென்னை அணியை பொறுத்தவரை களத்தடுப்பு மட்டும் சற்று மந்தமாக காணப்படுகிறது. ஆனாலும் துடுப்பாட்டம், பந்து வீச்சில் வலுவாக இருப்பதால், அது ஒரு பிரச்சினையாக எழவில்லை.

 உலகக்கிண்ண அணியில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் உள்ள அம்பத்தி ராயுடு அந்த சோகத்தை மறந்து இந்த ஆட்டத்தில் எப்படி கவனம் செலுத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மொத்தத்தில் வெற்றிப்பயணத்தை நீடித்து, அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே–ஆப்) முதல்அணியாக உறுதிசெய்யும் ஆர்வத்துடன் சென்னை வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர்.

முதல் 4 போட்டிகளில் 3 இல் வெற்றி பெற்று அசத்திய ஐதராபாத் அணி, அதன் பிறகு மும்பை, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகளுக்கு எதிராக வரிசையாக தோல்வியைத் தழுவியது. அந்த அணி தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (7 ஆட்டத்தில் ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 400 ஓட்டங்கள்), ஜோனி பேர்ஸ்டோ (304 ஓட்டங்கள்) ஆகியோரைத் தான் மலை போல் நம்பி இருக்கிறது. 

டெல்லி கெபிட்டல்சுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஆரம்ப ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ஓட்டங்கள் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்து தந்தது. இதனால் எளிதில் வெற்றி பெற்று விடும் என்றே தோன்றியது. 

ஆனால் அடுத்து வந்த வீரர்களில் யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. கடைசி 15 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை தாரை வார்த்து தோல்வி அடைந்தது. அவர்களின் நடுவரிசை பலவீனத்துக்கு இதுவே சான்று. இந்த குறைபாட்டை சரி செய்வதில் அந்த அணி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. மனிஷ் பாண்டே, யூசுப் தான், விஜய் சங்கர் உள்ளிட்டோர் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடிய இறுதிப்போட்டி உள்பட 4 போட்டிகளிலும் ஐதராபாத் அணி தோற்றது. இந்த சீசனிலும் சென்னை அணி பலம் வாய்ந்ததாக திகழ்வதால் ஐதராபாத் அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35