தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வை அதிகரித்துள்ளதாக கூறி அரசு தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது. ஒரு நாள் சம்பளமாக 83 ரூபா 50 சதமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அமைச்சர்களான திகாம்பரம், மனோ கணேசன் இராதாகிருஸ்ணன் ஆகியோர் பிரதமரை பாராட்ட போகிறார்களா? அல்லது எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விடுக்க போகிறார்களா என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன கேள்வி எழுப்பியுள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வை அதிகரித்துள்ளதாக கூறி அரசு தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது. ஒரு நாள் சம்பளமாக 83 ரூபா 50 சதமே அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் இலாபத்திற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான திகாம்பரம், மனோ கணேசன், இராதாகிருஸ்ணன் போன்றவர்கள் இதற்கு சொல்லப் போவது என்ன.
பிரதமர் ரணில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்வதாக கூறி ஊடகங்கள் மூலம் பாராட்டி அறிக்கை விடுத்தார்கள். ஆனால் பிரதமர் தலையீட்டின் மூலம் 83.50 சதம் சம்பளம் மட்டும் தான் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அமைச்சர்களான திகா, மனோ, இராதா கிருஸ்ணன் ஆகியோர் பிரதமரை பாராட்ட போகிறார்களா? அல்லது எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விடுக்கவுள்ளார்களா என கேட்க விரும்புகிறேன்.
தோட்டத் தொழிலாளர்கள் அன்றாட உணவிற்கு அதிகமாக பயன்படுத்தும் மாவின் விலையை அரசு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள மலையகத்தில் உள்ள அமைச்சர்கள் அதற்கு எதிராக அறிக்கை விடுக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். இவ்வாறான அரசியல்வாதிகள் யார் என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த அரசை பதவியில் அமர்த்த மலையக மக்கள் பெரும் ஆதரவை வழங்கினார்கள். ஆனால் அம் மக்களை ஏமாற்றி வருகின்றது. மலையகத்தில் வீடமைப்பு திட்டங்களை உருவாக்கப் போவதாக அரசு கூறுகின்றது. அதன் காரணம் 1983 ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சியில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அம் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு வீடுகள் தீ வைக்கப்பட்டன. அதன் பாவங்களை கழுவுவதற்குத்தான் வீடமைப்புத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM