வவுணதீவு பொலிஸ் பிரிவு, குருந்தையடி முன்மாரி, காஞ்சிரங்குடா கிராமத்திலுள்ள மாமரமொன்றியிலிருந்து கூலித் தொழிலாளியான ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்யாக்கிழமை (16.04.2019) சடலமாக மீட்கப்பட்ட நபர் 3 பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி தருமலிங்கம் (வயது 40) என்பவருடையது என அவரது மனைவி பொலிஸாரிடம் அடையாளம் காட்டியுள்ளார்.
தனது மகள் பாடசாலைச் சுற்றுலா செல்வதற்காக உணவு தயாரித்து ஏற்ற ஒழுங்குகளைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் அதிகாலை 2 மணியளவில் எழுந்து வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டு வளவிலுள்ள மாமரக் கிளையில் தனது கணவர் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் மனைவி பொலிஸ் வாக்கு மூலத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர் புதுவருட மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் அதிக மதுபோதைக்குட்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் உடற் கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை, விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM