போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் தொடர்பில் டுபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் 6 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 6 பேரில் ஒருவர் மாகந்துரே மதூஷின் உறவினர் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த 6 பேரும் இன்று அதிகாலை 4.45 மணிக்கு டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தபோது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களை பொறுபேற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டுபாயில் இருந்து செனவிரத்ன மாவத்தகே தயான் புத்திம பெரேரா, மொஹமட் பதியுதீன் மொஹமட் ரியாஷ், ரணசிங்ககே சுரேஷ் லசந்த, யோன் மெரங்க சைமன் ஹேவகே ரூபதாச, மொஹமட் ஜபீர் மொஹமட் ஹிப்ரே, சமரசிங்ககே நிலான் ரொமேஷ் ஆகியோரே இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களாவர்.
இந்நிலையில் கடந்த காலங்களில் மாகந்துரே மதூஷுடன் கைதானவர்களுள் 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, டுபாயில் வைத்து மாகந்துரே மதூஷுடன் 21 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM