ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளுக்கு மேலதிக பொலிஸ் குழு 

Published By: Priyatharshan

17 Apr, 2019 | 05:49 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் ஆரம்பகட்ட  விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரிடம் முன்வைக்கப்பட்டுள்ள  கோரிக்கைக்கு அமைய  மேலும் 6 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தகவல்கள் தெரிவித்தன. 

இதற்கமைய, ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில் 18 உத்தியோகத்தர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இந்த ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் ஒளடத கொள்வனவின்போதும் பசு இறக்குமதியின்போதும் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடு குறித்தும், காப்புறுதி தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்தும் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.

இதனிடையே, கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு இணங்க, ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக  சில அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆணைக்குழு முன்னிலையில் அடுத்த சில வாரங்களுக்குள் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10