இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கைகளில் சேறு படிந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தினார்.
எமது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற பெரியளவான திறைசேரி மோசடி இடம்பெற்று 13 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் அரசானது இரண்டாவது முறையாகவும் பாரிய திறைசேரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் நேற்று புதன்கிழமை பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நல்லாட்சி அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கைகளில் சேறு படிந்துள் ளது.
வரலாற்று ரீதியில் இவ்வாறான மோசடி இடம்பெற்று 13 மாதங்கள் கடந்த நிலையிலும் இது தொடர்பில் உரிய விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் அரசானது மீண்டும் பாரிய மோசடியொன்றை முன்னெடுத்துள்ளது. அதாவது அரசின் தேவைக்காக கடந்த மாதம் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து 10 மில்லியன் கடன் தொகையினை கோரியிருந்த அரசானது மறுபுறம் இதற்கு மாறாக 29 மில்லியன் ரூபாவினை 14.2 சதவீத வட்டிக்கு பெற்றுக்கொண்டுள்ளது.
இவ்வாறான பல்வேறு மோசடிகள் இலங்கை மத்திய வங்கியில் நாளுக்கு நாள் அரங்கேற்றப்பட்டு வருகின்றமையானது எமது பொருளாதார நிலைபற்றி நாம் அனைவரும் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும்.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டன.
இவ்வாறான நிலையிலேயே பாராளுமன்றத்தை முன்னதாக கலைத்து இந்த விடயங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூடிமறைப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்தார். இந்த விடயத்தில் எவ்வாறான தவறுகளும் இடம்பெறவில்லை என அரசாங்கம் தெரிவிக்குமாயின் கோப் குழுவின் அறிக்கையினை உடனடியாக பாராளுமன் றில் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசாங்கமானது தற்போது மத்திய வங்கியிடமிருந்து 14.2 வீத வட்டி அடிப்படையில் கடன் பெறுகிறது. இது சாதாரண உற்பத்தியாளர்களையும், வங்கி கடன்பெறுபவர்களையுமே பாதிக்கும். கடந்த மார்ச் 29 ஆம் திகதி அதிக வட்டிவீதத்தில் பெற்ற கடனைத் தொடர்ந்து மீண்டும் 31ஆம் திகதி குறைந்த அளவில் பெறுகின்றது. இந்தச் செயற்பாடானது எமது நாட்டில் அரங்கேறிய இரண்டாவது திறைசேறி மோசடி என்றே குறிப்பிட வேண்டும். அந்த வகையில் இது தொடர்பில் விசார ணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமா னது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM