(நா.தினுஷா)
இந்த ஆண்டின் இறுதியில் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான உரிய காலமும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதித் தேர்தலில் இருந்து தப்பிக்கவோ அல்லது தேர்தலை உரியகாலத்தில் நடத்துவதை தடுத்து நிறுத்தவோ எவராலும் முடியாது என மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.
கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக நடத்தப்பட்டமையினால் உள்ளூராட்சிமன்றங்களின் உறுப்பினர்களின் அதிகரிப்புடன் செலவுகளும் பிரச்சினைகளும் அதிகரித்திருந்தன. இந்த நிலையை எதிர்வரும் மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது இடமளிக்க முடியாது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டியுள்ளதை மறந்துவிடக் கூடாது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்பார்ப்பாக காணப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியும் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது.
அரசியல் நெருக்கடி நிலைமையின் பின்னர் மாகாண சபை தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டு போயிருந்தன.
இருப்பினும் தற்போது ஜனாதிபதித் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டியது அவசியமாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தலின் பின்னரோ மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் அது நிச்சியமாக புதிய முறையில் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM