ஒரு பிள்ளையின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Published By: Daya

16 Apr, 2019 | 03:27 PM
image

லிந்துலை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பெல் கிரேவியா தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

 பிரதேச மக்களினால் லிந்துலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 34 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு தூக்கிட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.  

குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு, நீதவானின் மரண விசாரணைகளை அடுத்து குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான ஒழுங்குகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர். 

சம்பவதினத்தன்று குறித்த நபரின் குழந்தையும் மனைவியும் வீட்டில் இருக்கவில்லை என்றும் அவர்கள் அம்பேவெலயிலுள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும்  ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53