காதல் விவகாரம் கொலையில் நிறைவேறியது ; 21 வயது இளைஞன் பரிதாபமாக பலி

Published By: Priyatharshan

16 Apr, 2019 | 04:02 PM
image

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவின் கடற்படை முகாமிற்கு  அருகிலேயே குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் 21 வயதுடையவரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

யுவதி ஒருவரை இரு இருளைஞர்கள் காதலித்து வந்த நிலையில் காதல் விவகாரத்தால்  இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே குறித்த கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன் திருகோணமலை-நீதிமன்ற வீதி,வில்லூன்றி பகுதியைச் சேர்ந்தரென அடையாளம் காணப்பட்டுள்ளது.

 இந்நிலையில் குறித்த இளைஞரை கொலைசெய்த  சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட நபரிடம்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02