அவுஸ்திரேலியாவிலுள்ள இரவு விடுதி அருகே இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 4 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.
அவுஸ்திரேலிய தலைநகர் மெல்போர்ன் நகருக்குட்பட்ட பிரஹான் பகுதியில் உள்ள இரவு விடுதியொன்றின் வாசலில் 14 ஆம் திகதி அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச சம்பவத்திற்கு எவ்வதி அமைப்புக்களோ தனி நபர்களே இதுவரை பொறுப்புக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த 1996 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் போர்ட் ஆர்த்தர் பகுதியில் ஒருவர் நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் இடம்பெற்ற 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM