அனுமதிப் பத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபரை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அனுமதிப் பத்திரமின்றி தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 மதுபான போத்தல்களை ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர அம்பேபிட்டியவின் பணிப்புரைக்கு அமைய ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன்டிலரி தோட்டப்பகுதியில் உள்ள லயன் குடியிருப்பில் அறை ஒன்றில் அனுமதிப் பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 மதுபான போத்தல்களை மீட்டதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணை வழங்கப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படி நீதிவான் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM