அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் தனது முதலாவது குழந்தையை பிரசவிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக தனது குழந்தையை இழந்துள்ளார்.
குடாபோலன பகுதியை சேர்ந்தவர் 32 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர், அம்பாந்தோட்டை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரிடம் தனியார் சேவையில் ஆலோசனைகளை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய குறித்த பெண் பிரசவித்திற்காக கடந்த 5 ஆம் திகதி அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அன்றைய தினத்திலிருந்து இன்று காலை வரை குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்கள் அவரை பரிசோதனை செய்யவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை குறித்த பெண் குழந்தையை பிரசவித்த போதும், அது உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
தனது குழந்தையை இழந்த மனவேதனையுடன் குறித்த பெண் தொடர்ந்து வைத்தியாசலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
வைத்தியரின் கவனயீனத்தால் குறித்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி குழந்தையின் தந்தை, அம்பாந்தோட்டை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM