தனிப்பட்ட பயணமொன்றினை முன்னெடுத்து அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.
அமெரிக்காவில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இரு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே அவர் இன்று நாடு திரும்புயள்ளார்.
இதேவேளை கோத்தபாய ராஜபக்சவிடம் அவரிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்த ஆவணங்களை பிரீமியர் குரூப் இன்டர்நசனல் எனும் தனியார் நிறுவனத்தினர் கையளித்தமை குறித்த தகவல்களும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கலிபோர்னியாவில் உள்ள டிரேடர்ஸ் ஜோ வணிகவளாகத்திற்கு சென்றுவிட்டு வெளியே வந்தவேளை அவரிடம் குறிப்பிட்ட வழக்கின் பிரதிகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இலங்கை சிறைகளில் பெண்கள் பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுவது வழமையான விடயம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ள ரோய் சமாதானம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM