(ஆர்.யசி)
கோத்தாபயவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை, கோத்தாபய ராஜபக்ஷவை நெருக்கடிக்குள் தள்ளும் எந்த சூழ்ச்சியையும் ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள சிவில் வழக்குகள் அந்நாட்டு பிரஜை ஒருவரால் தொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் அமெரிக்க பிரஜை ஒருவர் மீதும் தொடுக்கப்பட்டுள்ள வழக்காகும். ஆகவே இது குறித்து இலங்கை எந்த விதத்திலும் தொடர்புபடப்போவதில்லை. ஐக்கிய தேசிய கட்சிக்கும் இந்த சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இலங்கையில் அவருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இவை அனைத்துமே சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் அவற்றில் எந்த தலையீடுகளும் இல்லாது நாம் செயற்பட்டு வருகின்றோம்.
அதேபோல் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரா இல்லையா என்பது குறித்து மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணிக்குள் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு அவர் களமிறக்கப்படுவார் என்றாலும் கூட அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தகுதியான வேட்பாளர் ஒருவரை நாம் தெரிவு செய்து களமிறக்க தயாராக உள்ளோம். சிங்கள மக்களை மட்டுமேயல்லாது தமிழ் முஸ்லிம் மக்களையும் பாதுகாக்கும் வகையில் அவர்களின் ஆதரவையும் பெரும் வேட்பாளரை நாம் களமிறக்குவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM