தங்கம் கடத்த முற்பட்ட விமான நிலைய ஊழியர் கைது

Published By: R. Kalaichelvan

11 Apr, 2019 | 02:37 PM
image

சட்டவிரோதமாக  தங்கம் கடத்த முற்றபட்ட குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர் ஒருவர் விமானநிலையத்தில் இன்று காலை 9 மணியளவில்  சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் நபர் ஒருவரிடமிருந்து குறித்த தங்க பிஸ்கெட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் தனது காலுறைகளில் தனித்தனியாக பொதி செய்து 3 கோடி ரூபா பெறுமதியான 40 தங்க பிஸ்கட்களை விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டுவர முற்பட்ட போதே அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட தங்கம் சுங்க பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு குறித்த தங்க பிஸ்கட்களின் பெறுமதி மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபாவென தெரிவித்துள்ளது.

குறித்த நபர் வத்தளையைச் சேர்ந்த 23 வயதுடைய நபரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46