நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் கடந்த மாதம் 15 ஆம் திகதி பிரென்டன் டர்ரன்ட் என்ற துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் 50 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்
உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பின் நியூசிலாந்தில் துப்பாக்கி பயன்பாடு மற்றும் விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை மேலும் வலுப்பெற்றது.
அதன்படி துப்பாக்கி பாவனை சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என பிரதமர் ஜெசிந்தா உறுதி அளித்தார். இதற்கிடையில் நியூசிலாந்தில் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த சட்டமூலம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று சட்டமாக நிறைவேறியது.
துப்பாக்கிச் சீர்திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இறுதி வாசிப்பு நிறைவடைந்த பின்னர் அதற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.
இதனை அரசியலமைப்பில் அதிகாரபூர்வமாக சட்டமாக்குவற்கு முன்பு அந்நாட்டு ஆளுநரிடம் அனுமதியைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM