அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் இன்று புதன்கிழமை காலை 5.30 மணியளவில் யானை தாக்கி ஸ்தலத்திலேயே உரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்நதவர் அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு 9ஆம் பிரிவைச் சேர்ந்த கமர்;தீன் என்றழைக்கப்படும் அகமதுலெவ்வை அப்புதுல் கபூர் வயது (66) என்ற குடும்பஸ்தராவார்.
மேற்படி விவசாயி வயல் வேலைக்காக அம்பாறை- அக்கரைப்பற்று வீதியிலிருந்து நான்காம் கட்டை வயல் பிரதேச வீதியூடாக சென்ற போது காட்டு யானை வழிமறித்து நடத்திய தாக்குதலில் பலத்த காயங்களுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM