ஜப்பானில் ‘எப்-35’ போர் விமானம் பசிபிக் கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளனாது. விமானத்தில் சென்ற விமானியின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
ஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரில் விமானப்படைத் தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் மாலை ‘எப்-35’ ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்நிலையில் குறித்த விமானத்தில் விமானியைத் தவிர வேறுயாரும் இல்லை.
விமானம் புறப்பட்டுச் சென்ற ½ மணி நேரத்துக்குப் பின்னர் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இந்நிலையில், ‘எப்-35’ போர் விமானம் பசிபிக் கடல் பகுதியில் விழுந்து நொருங்கியது தெரியவந்தது. நேற்று அதிகாலையில் அந்த விமானத்தின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன. அதே சமயம் விமானத்தில் சென்ற விமானியின் கதி என்ன ஆனது? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த விமானம் விமானப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டு ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM