வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைதியொருவரிடமிருந்து சயனைட் வில்லைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மாரலசுரங்க என அழைக்கப்படும் பாதளஉலகத்தை சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து சயனைட் வில்லைகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
வெலிக்கடை சிறைச்சாலையின் கைதியொருவரிற்கு இரு சயனைட் வில்லைகள் உட்பட சில பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கிடைத்தது என பொலிஸர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிறைச்சாலை புலனாய்வு பிரிவினரிற்கு அறிவித்ததை தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு குறித்த கைதியிடமிருந்து சயனைட் வில்லைகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
தெஹிவளையை சேர்ந்த குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் குற்றங்களிற்காக கைதுசெய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொனகோவில ரோஹ என்ற கைதியை கொல்வதற்காகவே இந்த சயனைட் எடுத்துவரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM