(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற நான்கு அணிகளுக்கு இடையிலான அழைப்பு சர்வதேச வலைபந்தாட்டப் போட்டிகளில் இலங்கை சிரேஷ்ட அணியும் மலேசிய அணியும் வெற்றிபெற்றன.
நேற்று மாலை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை இளையோர் அணியை சந்தித்த இலங்கை சிரேஷ்ட அணி 78 க்கு 34 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
எனினும் இந்த வெற்றி சிரேஷ்ட அணிக்கு போதுமானதாக அமைந்தது என்று கருத முடியாது.
இப் போட்டியின் முதலாவது கால் மணி நேர ஆட்டத்தை 22 க்கு 8 என்ற அடிப்படையிலும் இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தை 18 க்கு 11 என்ற அடிப்படையிலும் தனதாக்கிய இலங்கை சிரேஷ்ட அணி இடைவேளையின் போது 40 க்கு 19 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் திறமையை வெளிப்படுத்திய இலங்கை சிரேஷ்ட அணி மூன்றாவது கால் மணி நேர ஆட்டத்தை 20 க்கு 4 என தனதாக்கிக்கொண்டது. தொடர்ந்து நடைபெற்ற கடைசி ஆட்ட நேர பகுதியில் இரண்டு அணியினரும் சமமாக மோதிக்கொண்டனர். எனினும் இறுதிக் கட்டத்தை 13 க்கு 11 என தனதாக்கிய இலங்கை சிரேஷ்ட அணி 73 க்கு 34 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
இப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற மிகவும் பரபரப்பான போட்டியில் கென்யாவை 2 கோல்கள் வித்தியாசத்தில் மலேசியா வெற்றிகொண்டது.
இப் போட்டியில் 44 கோல்களை மலேசியாவும் 42 கோல்களை கென்யாவும் பெற்றுக்கொண்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM