(ஆர்.விதுஷா)
பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ - பெட்ரோசோ தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறுவதாக நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்றது. இதற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன் போது சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை , சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM