நாய்க்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

Published By: Digital Desk 4

10 Apr, 2019 | 02:12 PM
image

பண்டாரகம, ஜனஹித மாவத்தையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முச்சக்கரவண்டி ஓட்டுனர்  ஒருவர் பாதையில் சென்ற நாயை காப்பற்ற முயற்சித்த போது எதிரில் வந்த வேனுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் மற்றும் அவரது மனைவி ஆகியோர்.  பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். 

பாணந்துரை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்தில் படுகாயமடைந்த பெண் பாணந்துரை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் குறித்த  வேன் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59