யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடலட்டை பிடிப்பவர்களைத் தடை செய்வது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்க முடியாது.
அவர்கள் தொழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் த.கனகராஜ் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் கடலட்டை பிடிப்பில் ஈடுபடுபவர்களைத் தடை செய்ய வேண்டும் என்று குடாநாட்டு மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்நனர்.
இந்நிலையில் குடாநாட்டில் கடலட்டை பிடித்த தென்பகுதி மீனவர்களைக் குடாநாட்டிலிருந்தும் வெளியேற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. தென்னிலங்கையிலிருந்து வந்து கடலட்டை பிடித்த நூற்றுக் கணக்கான மீனவர்களும் ஒரு சில உள்ளூர் மீனவர்களும் கடலட்டை பிடிப்பதிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பாக உள்ளூர் மீனவர் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். அந்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்த யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர், மாவட்டச் செயலக அதிகாரியையும் அழைத்திருந்தார். விசாரணை முடிவில் மேற்கண்ட விடயத்தை எழுத்தில் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக மீண்டும் குடாநாட்டு மீனவர்களின் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக சில மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, மனித உரிமை ஆணைக்குழு இணக்கத்தை ஏற்படுத்த முடியும் அல்லது ஆலோசனை வழங்கும் அமைப்பே அன்றி இவர்களுக்குக் கட்டளையிடும் அதிகாரம் கிடையாது. அதனால் அவர்களின் கூற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது – என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM