“தென்­ப­குதி மீன­வர்­க­ளை தொழில் செய்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்­டும்”

Published By: Digital Desk 4

10 Apr, 2019 | 11:03 AM
image

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் கட­லட்டை பிடிப்­ப­வர்­க­ளைத் தடை செய்­வது தொடர்­பாக மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னிக்க முடி­யாது. 

அவர்­கள் தொழில் செய்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்­டும் என்று யாழ்ப்­பாண மாவட் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வின் இணைப்­பா­ளர் த.கன­க­ராஜ் யாழ்ப்­பா­ணம் மாவட்­டச் செய­ல­கத்­துக்கு எழுத்­து மூலம் அறி­வித்­துள்­ளார்.

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்டு மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாதிக்­கும் வகை­யில் கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளைத் தடை செய்ய வேண்­டும் என்று குடா­நாட்டு மீன­வர்­கள் நீண்­ட­கா­ல­மாக கோரிக்கை விடுத்­து­வ­ருகின்நனர்.

இந்நிலை­யில் குடா­நாட்­டில் கட­லட்டை பிடித்த தென்­ப­குதி மீன­வர்­க­ளைக் குடா­நாட்­டி­லி­ருந்­தும் வெளி­யேற்­றும் முயற்­சி­கள் எடுக்­கப்­பட்­டன. தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து வந்து கட­லட்டை பிடித்த நூற்­றுக் கணக்­கான மீன­வர்­க­ளும் ஒரு சில உள்­ளூர் மீன­வர்­க­ளும் கட­லட்டை பிடிப்­ப­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

இது தொடர்­பாக உள்­ளூர் மீன­வர் ஒரு­வர் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார். அந்த முறைப்­பாட்டை விசா­ர­ணைக்கு எடுத்த யாழ்ப்­பாண மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் இணைப்­பா­ளர், மாவட்­டச் செய­லக அதி­கா­ரி­யை­யும் அழைத்­தி­ருந்­தார். விசா­ரணை முடி­வில் மேற்­கண்ட விட­யத்தை எழுத்­தில் அறி­வித்­துள்­ளார்.

இதன் கார­ண­மாக மீண்­டும் குடா­நாட்டு மீன­வர்­க­ளின் பொரு­ளா­தா­ரம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தாக சில மீன­வர்­கள் அச்­சம் தெரி­விக்­கின்­ற­னர்.

இது தொடர்­பில் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ.சுமந்­தி­ர­னைத் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, மனித உரிமை ஆணைக்­குழு இணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யும் அல்­லது ஆலோ­சனை வழங்­கும் அமைப்பே அன்றி இவர்­க­ளுக்­குக் கட்­ட­ளை­யி­டும் அதி­கா­ரம் கிடை­யாது. அத­னால் அவர்­க­ளின் கூற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்ற கட்­டா­யம் கிடை­யாது – என்­றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31