தாய்லாந்தில் கடற்கரையில் செல்பி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என இந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாய்லாந்தில் மாய் காவோ என்ற கடற்கரைப் பகுதிக்கு அருகில் புக்கட் விமானநிலையம் அமைந்துள்ளது. அங்கு விமானங்கள் ஏறும் போதும் தரை இறங்கும் போதும் கடற்கரைப் பகுதியில் சில அடி உயரத்தில் பறப்பது வழக்கம்.
இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விமானங்கள் தரை இறங்க துவங்கும்போது செல்பி எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
இதனை விடுமுறை காலங்களில் சுற்றுலாவாசிகள் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது முக்கிய அங்கமாகவே இருந்துள்ளது.
இந்நிலையில் விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியாகும் அதிவேக காற்றில் சிக்கி சிலர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதன் காரணமாக கடற்கரைப் பகுதியில் விமானங்கள் முன் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையாக 20 வருட சிறை தண்டனையும் அல்லது 40,000 பாஹ் வரை அபராதமும், அதிகபட்சமாக மரண தண்டனையும் வழங்கப்படும் என்றும் தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM