ஆப்கானிஸ்தான் கண்ணிவெடி தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு அமெரிக்க படை வீரர்கள் பக்கபலமாக இருந்து வருகின்றனர். இதனால் அமெரிக்க வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் காபூலில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்துக்கு அருகே அமெரிக்க வீரர்கள் சிலர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் வீதியின் அடியில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் குறித்த வாகனம் சிக்கி வெடித்து சிதறியது.
இதில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு வைத்திய சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
குறித்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பாம்பியோ, குண்டுவெடிப்பில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM