எப் - 16 ரக போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி, இந்திய வான் மண்டலத்துக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்திருந்தது.
எனினும் அண்மையில் இதுதொடர்பாக அமெரிக்க பத்திரிகையொன்று வெளியிட்ட தகவலால் சந்தேகம் எழுந்தது. இருப்பினும், எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய விமானப்படை தெரிவித்தது.
இதனிடையே இந்திய விமானப்படை துணைத் தளபதி எப்-16 ரக விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக நேற்றைய தினம் உறுதிபட தெரிவித்தார்.
இந் நிலையிலேயே இந்தியா வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை என்று பாகிஸ்தான் புது விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் தனது டுவிட்டரில், இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM