(ஆர்.விதுஷா)
வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திலிருந்து நாட்டை மீட்டு நாட்டு மக்களுக்காக செயற்படும் ஒரு அரசாங்கத்தினை பலமான முறையில் உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும்,ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியினரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்த தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர இவ்விரு கட்சிகள் மட்டுமன்றி அனைத்து சிறிய கட்சிகளும் கட்சி பேதங்களை மறந்து நாட்டின் ஜனநாயகத்திற்காக ஒன்றிணைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தேசிய அமைப்புக்களுக்கான பொது நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டின் தற்போதைய நிலையை எடுத்து கொண்டால் வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அவ்வாறாக கடந்த காலங்களிலும் கூட,மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடகளும் எமது நாட்டை கட்டுப்படுத்தி தமது ஆதிக்கத்திற்கு கீழ கொண்டு செல்லும் வகையிலேயெ அமையப்பெற்றிருந்தன.
அத்துடன் தற்போதைய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமும் வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு ஆதரவு வழங்கும் செயல்களையே மேற்கொண்டும் வருகின்றது.
அந்த வகையில் நோக்கும் போது ,அமெரிக்க நிறுவனமான அமெரிக்கன் சலெஞ் கோப்பரேசன் என்னும் நிறுவனம் பிரதமரின் உத்தியோக பூர்வ வாசத்தலத்தில் நிறுவப்பட்டுள்ளதுடன், நாட்டின் நிலப்பரப்ப தொடர்பான சட்டங்களை முடிக்கும் வகையிலான ஒப்பந்தமொன்றிலும் அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளது.
இத்தகைய செயற்பாடுகளினூடாக நாடு முழுமையாக வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு உட்படும் தர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டள்ளது.
இவ்வாறான நிலையில் ஜக்கியதேசிய கட்சி அரசாங்கத்தை தொடர விட்டோமேயானால் எதிர்காலத்தில் நாடு பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM