எம்மில் பலர் இளமையாக இருக்கும் பொழுது சிரித்தால் கன்னத்தில் குழி விழும். இதனைப் பார்த்து ரசித்து இருக்கிறோம். சிலர் சிரிக்கும் போதும், அபூர்வமாக வெட்கப்படும் போதும் கன்னங்கள் சிவந்து விடும், இதை நாம் ரசித்தாலும், இது ஒரு தோலில் ஏற்பட்ட குறைபாடு என்றும், இந்த பாதிப்பிற்கு ரோசாசியா என்றும் குறிப்பிடுகிறார்கள் மருத்துவர்கள்.
சிரிக்கும்போது முகத்தில் உள்ள தசைகள் விரிவடைகின்றன. அப்படி விரிவடையும் போது அங்கு உள்ள இரத்த நாளங்கள் இயல்பை விட அதிக அளவில் குவிவதால் அப்பகுதியில் சிவந்து விடுகின்றன.
இது தோலின் அடிப்பகுதியில் அதாவது பல்வேறு அடுக்குகளைக் கொண்ட தோலின் மேல் பகுதியில் உண்டாகும் மாற்றமே இதற்குக் காரணம். இதற்கு துல்லியமான மருத்துவ சிகிச்சை முழுமையாக கண்டறியப்பட வில்லை என்றாலும், ரோசாசியா தெரபி என்ற சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது.
இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை தேநீரை பருக வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிலருக்கு சோற்று கத்தாழை என்ற மூலக்கூறைக் கொண்டு செய்யப்படும் களிம்புகளை பயன்படுத்தலாம். சிலருக்கு பூப்பெய்தியவுடன் கண்களில் சிறிய பாதிப்புகளோ அல்லது மூக்கின் அமைப்பில் வேறுபாடுகயோ ஏற்பட்டால் அவர்களுக்கு இந்த ரோசாசியா பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் தோல் மருத்துவர்களை அணுகி ஆலோசனைப் பெறவேண்டும். அத்துடன் இதனை தூண்டும் உணவு வகைகளை தவிர்த்து விற்றமின், ஏ விற்றமின் பி3, புரோபயாடிக்ஸ், புதினா டீ, கிரீன் டீ ஆகியவற்றை உணவு உணவில் சேர்த்தால் இதனை கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள்.
டொக்டர் மோத்தி ராம்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM