முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் அவரிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்த ஆவணங்களை பிரீமியர் குரூப் இன்டர்நசனல் எனும் தனியார் நிறுவனத்தினர் கையளித்தமை குறித்த தகவல்களும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கலிபோர்னியாவில் உள்ள டிரேடர்ஸ் ஜோ வணிகவளாகத்திற்கு சென்றுவிட்டு வெளியே வந்தவேளை அவரிடம் குறிப்பிட்ட வழக்கின் பிரதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
அவரது முதுகில் தட்டிய பிரீமியர் குரூப் இன்டர்நசனல் எனும் தனியார் நிறுவனத்தின் பணியாளர்கள் - திரு நந்தனசேன கோத்தபாய ராஜபக்ச உங்களிற்கான அழைப்பாணை என தெரிவித்து அவரிடம் ஆவணங்களை வழங்கியுள்ளனர்
குறிப்பிட்ட ஆவணங்களை கோத்தபாய ராஜபக்சவிடம் வழங்கும் புகைப்படத்தை எடுத்து அதனை ஆதாரமாக்கியுள்ளனர்
இதன் போது கோத்தபாய ராஜபக்ச அதிர்ச்சியடைந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோத்தபாய ராஜபக்சவி;ற்கு எதிராக அமெரிக்காவில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை இலங்கையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM