ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்கள் விளையாடும் விதத்தினை அடிப்படையாக வைத்து உலக கிண்ணப்போட்டிகளிற்கான இந்திய அணியை தெரிவுசெய்யப்போவதில்லை என இந்திய தெரிவுக்குழுவின தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணப்போட்டிகளிற்கான இந்திய அணி 15 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண அணிக்கான தெரிவில் ஐ.பி.எல். அதிக தாக்கம் செலுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் ஐ.பி.எல்.லில் வீரர்கள் விளையாடும் விதத்தை வைத்து வீரர்கள் தெரிவுக்குழு குறித்து சிந்திக்கவில்லை என பிரசாத் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இது குறித்து தெளிவாகயிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உலக கிண்ணப்போட்டிகளிற்கான வீரர்கள் தெரிவின் போது ஐ.பி.எல்.லில் வீரர்கள் விளையாடும் விதத்தினை கருத்தில் கொள்ளக்கூடாது என ரோகித்சர்மா வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ண போட்டிகளிற்கு வீரர்களை தெரிவு செய்யும்போது ஐ.பி.எல். போட்டிகளை அடிப்படையாக வைத்து தெரிவு செய்யக்கூடாது கடந்த நான்கு வருடங்களில் வீரர்கள் விளையாடிய விதத்தை வைத்து தெரிவு செய்யவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நான்கு வருடங்களில் நாங்கள் பல போட்டிகளில் விளையாடியுள்ளோம் வீரர்களை தெரிவு செய்ய இதுவே போதுமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM