பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் கிழக்கின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தி இருவாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க உத்தரவிட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டீ.ஆர்.எல். ரணவீரவுக்கே இது குறித்த விசாரணைகளை நடத்துமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு செய்துள்ள முறைப்பாட்டின் பிரதியொன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு கிடைத்ததை அடுத்தே இது குறித்த விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆரம்பிக்கப்படும் விசாரணைகளில் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தக்க ஏதேனும் குற்றச் சாட்டுக்கள் வெளிப்படின் அதன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தொடர்ந்தும் குறித்த உயர் பதவியில் இருப்பது விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின் அவரை உடனடியாக இடமாற்றம் செய்யவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவினால் விசாரணை அதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரணவீரவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இது குறித்து மேலும் அறிய முடிவதாவது,
குறித்த உயர் பொலிஸ் அதிகாரி கடந்த டிசம்பர் மாதமே கிழக்கு மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையில் உள்ள இருவருடன் சேர்ந்து அந்த அதிகாரி பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் இரவு வேளைகளில் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்புவதால் பல பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி பொலிஸ் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மாதாந்த சோதனை நடவடிக்கை ஒன்றின் போது, இந்த பொலிஸ் அதிகாரி தனது இடுப்புப் பட்டியை கழற்றி பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் கொடுத்துள்ளதாகவும் அதனால் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை விட, குறித்த உயர் அதிகாரி பாட நெறியொன்றை முன்னெடுக்கும் நிலையில், அதற்கான ஒப்படைகளை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வைத்து செய்வதாகவும் அந்த கான்ஸ்டபிளின் சொந்த செலவில் அதன் பிரதிகள் எடுத்துக்கொள்வதாகவும் அது குறித்தும் விசாரணை செய்யுமாறும் முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM