நல்லாட்சி அரசாங்கத்தின் போக்கிற்கு எதிராக எமது நிலைப்பாடு காணப்படும் போது ஒரு மேடையில் ஏறி மக்கள் முன் போலியான வேஷத்தை காண்பிக்க முடியாது.
எனவே,அழைப்பிதழ் கிடைத்தாலும் காலி மே தின கூட்டத்திற்கு செல்லப் போவதில்லை என கூட்டு எதிர் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே திட்டமிட்டவாறு கொழும்பில் இடம்பெறவுள்ள மே தின கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க் கட்சியினர் பங்கேற்பதற்கு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேலும் கூறுகையில்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்துடன் எவ்விதத்திலும் எம்மால் இணைந்து பயணிக்க முடியாது. எனவே தான் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் உழைக்கும் மக்களை ஒன்றுத்திரட்டி மே தினத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். தற்போது அழைப்பிதழ் அனுப்பியதற்காக காலியில் இடம்பெறவுள்ள மே தினத்திற்கு செல்ல முடியாது. அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்கை எதிர்க்கும் நாங்கள் எவ்வாறு ஒரு மேடையில் இருப்பது? . இன்றைய ( நேற்று)சந்திப்பின் போது காலி மே தினத்திற்கு செல்வது சாத்தியப்பட போவதில்லை என்பது தீர்மானிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தை மிகவும் தெளிவாக அறிவித்து விட்டார். ஆகவே அவரது தலைமையில் கொழும்பில் இடம்பெறவுள்ள மே தின கூட்டத்தில் கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள உள்ளனர்.
பொது மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்திற்கு வித்திடும் கடப்பாடு எதிர் வரும் மே தினம் கூட்டு எதிர்க் கட்சிக்கு காணப்படுகின்றது. ஆகவே தான் “ஐக்கிய மே தினமாக “ இம் முறை மே தினத்தை கருப்பொருளாக்கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டு எதிர் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற் சங்கங்கள் இ சிவில் அமைப்புகள் கலந்துக் கொள்ள உள்ளன . குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் கலந்துக் கொள்ளவுள்ளார். அரசியல் கட்சி பேதங்களை மறந்து ஒரு இலக்கிற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். நாடு தற்போது எதிர் கொண்டுள்ள நிலை மிகவும் மோசமானதாகவே காணப்படுகின்றது.
இதனை கருத்தில் கொண்டு அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும் . குறிப்பாக கூட்டு எதிர்க் கட்சியின் ஐக்கிய மே தின கூட்டம் நாட்டில் ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்துவதாகவும் உழைக்கும் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான அழுத்தங்கள் கொடுப்பதுமாகவே காணப்படுகின்றது. எனவே ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் எம்முடன் அணி திரள வேண்டும்.
எதிர்வரும் முதலாம் திகதி மே தினத்தன்று பிற்பகல் 1 மணிக்கு ஊர்வலமும் 3 மணிக்கு நாரேஹன்பிட்டி சாலிகா மைதானத்தில் மே தின கூட்டமும் நடைப்பெறும் . இதில் அனைத்து இன மக்களும் கட்சி பேதமின்றி கலந்துக்கொள்ள வேண்டும் என்பதே கூட்டு எதிர் கட்சியின் விருப்பமாகவும் அழைப்பாகவும் காணப்படுகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM