மட்டக்களப்பு சிறையிலிருந்து விடுதலையான வெல்லம்பிட்டிய திலான் சதுரங்க இன்று திங்கட்கிழமை மாலை சிறைச்சாலை வாசலில் வைத்து விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் சி ஜ டி யினர் கைது செய்யப்பட்டுள்ளததாகன பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
குறித்த நபர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் புதையல் தோண்டிய சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு 2 மாதம் சிறையில் அடைக்கபட்டுள்ள நிலையில் குறித்த வழக்கில் அபராதமாக 50 ஆயிரம் ரூபா செலுத்த கூறி நீதிமன்றம் அவரை கடந்த வாரம் தீர்பளித்து விடுதலைசெய்யதது. இருந்தபோதும் அபராத தொகையை அன்றைய தினம் செலுத்ததன் காரணமாக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்
இந்நிலையில் அபராத தொகையை இன்று நீதிமன்றில் செலுத்திய பின்னர் இன்று மாலை 4 .00 மணியளவில் சிறையிலிருந்து விடுதலை செய்தபோது சிறைச்சாலை சுற்று பாதுகாப்பில் இருந்த விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் சி ஜ டி யினர் அவரை கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவர் கடந்த 2008 ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் தேடப்பட்டுவந்த நிலையில் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
இதேவேளை பிள்ளையானுடன் நெருக்கமானவர் எனவும் முன்னர் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றியவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM