(எம்.எப்.எம்.பஸீர்)
தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் விஷேட திட்டங்களை அமுல் செய்யவுள்ளது.
பண்டிகை காலமாக கருதப்படும் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 20 ஆம் திகதிவரையிலான 10 நாட்களிலேயே அதிக வாகன விபத்துக்கள் பதிவாவது புள்ளி விபரங்களில் இருந்து உறுதியாகியுள்ள நிலையில் அதனை தடுக்க இந்த சிறப்புத் திட்டங்கள் அமுல் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அதன்படி இம்முறை போக்குவரத்து கடமைகளுக்காக மட்டும் 8000 போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுபடுத்தபப்டவுள்ளதாகவும், அவர்களில் சிவில் உடைகளில் பல பொலிசார் தேர்ந்தெடுக்கும் பஸ் வண்டிகளில் பயணம் செய்வர் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் குடி போதையில் வாகனம் செலுத்துவோரைக் கைதுசெய்ய முன்னெடுக்கப்படும் சிறப்புத் திட்டங்கள் அதிகரிக்கப்படவுள்ளதால் கையிருப்புக்கு மேலதிகமாக குடி போதையை பரிசீலனைச் செய்ய பயன்படும் 25 ஆயிரம் பலூன்களை இன்றைய தினம் இறக்குமதி செய்ததாகவும், அவை நாளை நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படம் எனவும் அவர் சுட்டிக்கடடினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM