சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ரா இன்று (08) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இது பற்றி கலந்துரையாடப்பட்டது.
பிராந்திய பாதுகாப்பிற்காக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான ஒத்துழைப்பின் மூலம் இணக்கப்பாட்டுடன் செயற்படுவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் பயற்சி குறித்து நன்றியை தெரிவித்த ஜனாதிபதி இதனை இன்னும் அதிகரிப்பதற்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த விடயம் தொடர்பில் இந்திய பாதுகாப்பு செயலாளர் கவனம் செலுத்தியுள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இது பற்றி தொடர்ந்தும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்ட வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இரண்டு நாடுகளினதும் பாதுகாப்பு செயலாளர்கள் இணைந்து கலந்துரையாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித்சிங் சந்து ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM