( செ. தேன்மொழி )
கொழும்பை அண்டியப்பகுதிகளிலும், புதுகுடியிருப்பு பகுதியிலும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மருதானை மற்றும் கிரேன்ட்பாஸ் பகுதிகளில் பொலிஸ் குற்றப் பிரிவினருக்கும் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது இருவர் கைது செய்யப்பட்டள்ளனர்.
கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபரொருவர் மருதானையில் 51 கிராம் 840 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கிரேன்ட்பாஸ் பகுதியில் 16 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கொழும்பு -14 சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுகுடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பகளின் போது பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்னொருவர் ஒரு கிராம் 860 மில்லி கிராம் ஹெரோயினும் ,12 000 ரூபா பணமும் , நான்கு தொலைப்பேசிகளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னாரில் 44 வயதுடைய சந்தேகநபரொருவர் 630 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM