( செய்திப்பிரிவு )
அநுராதப்புரத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் வீதி அபிவிருத்தி ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தளம் வீதியின் 38 ஆவது தூனுக்கருகில் இன்று சனிக்கிழமை அதிகாலை 12.40 மணியளவில் வீதி புணரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு கொண்டிருந்த வீதி அபிவிருத்தி ஊழியர்கள் இருவர் மீது அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகமையை நோக்கி சென்ற வேன் மோதுண்டதில் படுகாயமடைந்த ஊழியர்கள் பிரதேச வாசிகள் மூலம் அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின் உயிரிழந்துள்ளனர் என அநுராதபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இல 182 , நிகவெவ சந்தி , நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய குணசேகர கஜமன் கங்கானம்லாகே விஜயதாச மற்றும் புளுகாகந்த வீதி , கலபனாவ, நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பியங்கரகே சுஜித் பிரியன் எனப்படும் இரு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சடலங்கள் அநுராதபுர வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த விபத்து தொடர்பில் வேன் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM