இன்றையதினம் சில இடங்களில், கடுமையான வெப்பநிலை நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், வடமேல் மாகாணத்திலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, ஹம்பாந்தொட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது.
சூரியன், இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேரடியாக உச்சங் கொடுக்குமெனவும், இதற்கமைய இன்று நண்பகல் 12.12 அளவில் திக்வெல்ல, கெகனதுர, கொடவில மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சூரியன் உச்சங் கொடுக்கவுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிகளில் 42 செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் நிழலான இடங்களில் வசிக்குமாறும், அதிக நீராகாரத்தை பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வயதானவர்களும், சிறார்களும் இதுகுறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM