(நா.தனுஜா)
புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் உண்மையான நோக்கம் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பது அல்ல. மாறாக இந்த ஊழல் நிறைந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதைத் தடுப்பதே அதன் நோக்கமாகும் என்று தேசிய புத்திஜீவிகள் அமைப்பு சாடியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தேசிய புத்திஜீவிகள் அமைப்பைச் சேர்ந்தவரும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அனில் ஜயந்த கூறுகையில்,
பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கருத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம். அதேவேளை அதற்குப் பதிலாக அரசாங்கம் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்ற புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயங்களை உள்ளடக்கியுள்ளது. இப்புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் ஊடாக பாதுகாப்புப் படையினர், பொலிஸாருக்கு அதிகளவிலான அதிகாரங்கள் வழங்கப்படும் அதேவேளை, பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படும்.
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு அவசியமான வசதிகளை வழங்குவதை விடுத்து, தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கே முயன்று வருகின்ற நிலையில், மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். அரசாங்கம் முழுவதும் ஊழல் நிறைந்த அரசாக மாறியுள்ளது. அவ்வாறிருக்க எதிர்வரும் காலங்களில் மக்கள் தமக்கு எதிராகக் கிளர்ந்து எழுவதனைத் தடுக்கும் நோக்கிலேயே புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM