"சர்வதேச ரீதியில் இலங்கையை நகைப்புக்குள்ளாக்குவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்"

Published By: Digital Desk 3

04 Apr, 2019 | 05:01 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

மனித உரிமை பேரவையின் பரிந்துரைக்கு இணை அனுசரணை வழங்குவதாக கைச்சாத்திட்டு, பின்னர் அதில் சில விடயங்களை நிராகரிப்பதாக தெரிவிப்பது நகைப்புக்குரியது.

அதனால் இலங்கையை சர்வதேச மட்டத்தில் நகைப்புக்குள்ளாக்குவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர் கெஹலிய ரம்புக்கவல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.

அத்துடன் அமைச்சர் மங்கள சமரவீர இன்னும் வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகளில் தலையிட்டு வருகின்றார். வெளிநாட்டு நீதிபதிகள் எமது நீதிமன்றங்களில் அமர்வது பிரச்சினை இல்லை என்று தெரிவிக்கிறார். அதனால் ஜனாதிபதி அமைச்சர் மங்கள சமரவீரவின் நடவடிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் எமது நாடு சர்வதேச ரீதியில் தொடர்ந்தும் நகைப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54