புளியங்குளம் இராமனூர் பகுதியில் நேற்று (03) இரவு 9.30மணியளவில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார் அனுமதியின்றி லொறியில் கொண்டு செல்லப்பட்ட மாடுகளுடன், மூவரை கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
புளியங்குளம் பகுதியிலிருந்து றூவான்வெல்ல பகுதி நோக்கி லொறியில் அனுமதி பத்திரங்களுக்கு மேலதிகமாக மாடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் லொறியை வழி மறித்து சோதனை செய்த புளியங்குளம் பொலிஸார் குறித்த மாடுகளை மீட்டுள்ளதுடன், வாகனத்தையும் அதில் பயணித்த 29,34,37 வயதுடையவர்களையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM