பஸ்  - வேன்  மோதி விபத்து: மட்டு. ஆரையம்பதியில் சம்பவம் 

Published By: MD.Lucias

19 Apr, 2016 | 12:50 PM
image

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து கல்முனை ஊடாக கொழும்பு நோக்கி அதிக பயணிகளுடன் பயணித்த அதி கொகுசு தனியார் பஸ் வண்டி ஒன்று வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

மேற்படி விபத்துச் சம்பவம் நேற்று  இரவு சுமார் 10.15 மணியளவில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை ஆரையம்பதி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்துச் சம்பவத்தில் வீதியில் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் வேன் மற்றும் பஸ் வண்டியில்; பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. குறித்த விபத்தில் மோதிய இரு வாகனங்களும் பலத்த  சேதத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் படுகாயமடைந்த பெண், வீதியின் நடுவே  திடீரென குறுக்கிட்டதால் வேகமாக வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது. இதனையடுத்து  பின்னால் வந்த பஸ் வேனுடன் மோதியுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09