அனுராதபுரத்தில் உள்ள பெரிமியன்குளம் பலுகச்வெவ பகுதியில் வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
குறித்த வீடு தீ பரவியபோது வீட்டில் எவரும் இருக்கவில்லை அத்தோடு முழுமையான வீடும் எரிந்து தீக்கிரையாகியுள்ளது.
தீக்கரையான வீட்லுள்ளவர்கள் விருந்தொன்றுக்காக அயலவரின் வீட்டுக்கு சென்று திரும்பும்போது வீடு தீக்கிரையானதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்திற்கு மின்சார ஒழுக்கே காரணமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீக்கிரையான வீட்டிலுள்ள குடும்பத்தில் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள் மற்றும் ஆடைகள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளது. இதேவேளை, பிள்ளைகளில் ஒருவர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM