கடல் ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் கைது

Published By: Digital Desk 4

04 Apr, 2019 | 12:21 PM
image

(செ.தேன்மொழி)

அழிந்து வரும் உயிரினமாக கருதப்படும் கடல் ஆமை இறைச்சி ஒரு தொகையுடன் சந்தேக நபரொருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று  புதன்கிழமை  கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது பாதுகாக்கப்பட்டு வருகின்ற உயிரினமான  4.5 கிலோ கிராம் கடல் ஆமை இறைச்சுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன்,கடற்படையினர் சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் , இதன்போது கடற்படையினரால் மீட்க்கப்பட்ட கடல் ஆமை இறைச்சியையும் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04