(செ.தேன்மொழி)
அழிந்து வரும் உயிரினமாக கருதப்படும் கடல் ஆமை இறைச்சி ஒரு தொகையுடன் சந்தேக நபரொருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று புதன்கிழமை கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது பாதுகாக்கப்பட்டு வருகின்ற உயிரினமான 4.5 கிலோ கிராம் கடல் ஆமை இறைச்சுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன்,கடற்படையினர் சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் , இதன்போது கடற்படையினரால் மீட்க்கப்பட்ட கடல் ஆமை இறைச்சியையும் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM