கடும் வெப்பத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள, மின்சார நெருக்கடியை தீர்த்துக்கொள்ளும் நோக்குடன் 100 மெகாவோட் மின்சாரத்தினை கொள்வனவு செய்ய மூன்று தனியார் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹெக்ரிகோ , வீ பவர் மற்றும் அல்டாஸ் ஓல்டர்நேடிவ் மின் உற்பத்தி நிறுவனங்கள் இதற்காக குத்தகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த நிறுவனங்களுடன் எதிர்வரும் தினத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும், குறித்த நிறுவனங்களிடம் இருந்து எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரம் கொள்வனது செய்யப்படவுள்ள நிலையில் , இதற்காக மின் அலகொன்றிற்கு வாரியம் 28 முதல் 30 ரூபா வரை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்த பின்னர் , நாட்டு மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதே தமது நோக்கமென அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM