திருகோணமலை, கிண்ணியா பகுதியை அண்டிய முக்கிய வைத்தியசாலையொன்றில், குழந்தை ஒன்றின் உடல் இரண்டாக பிரிந்து பிறந்துள்ளது.
39 வயதுடைய கர்ப்பிணிப் பெண் கடந்த செவ்வாயன்று, கிண்ணியாவின், குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரசவத்தின் போது குழந்தை தலை வேறாகவும், உடல் வேறாகவும் பிரிந்து பிறந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மகப்பேற்று பரிசோதனைக்காக வைத்தியரை சந்தித்தபோது, குழந்தைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரசவத்திற்கு 24ஆம் திகதியும் குறித்துக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு, செவ்வாய் கிழமையன்று குழந்தை பிரசவிப்பதற்கான வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்தே வைத்தியசாலையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியர்கள், சுகபிரசவத்திற்காக குழந்தையை வெளிநோக்கி இழுத்துள்ளனர். இதன்போது உடல் வேறாகவும், தலை வேறாகவும் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், குழந்தை ஒரு கிழமைக்கு முன் இறந்துள்ளதென தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஒரு கிழமைக்கு முன்னர் குழந்தை இறந்திருந்தால் பிரசவ வலி எப்படி வந்திருக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
குழந்தையின் சடலம் தற்போது பிரதே பரிசோதனைக்காக பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM