நாடு கடத்த வேண்டாமென மதூஷ் மேன்முறையீடு

Published By: Vishnu

03 Apr, 2019 | 07:58 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாதாள உலகத் தலைவன் மாகாந்த்துரே மதூஷ்  தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் எனக்கோரி மேன் முறையீடு செய்துள்ளார். 

இந்திய சட்டத்தரணிகள் சிலர் ஊடக இந்த மேன்முறையினத் டுபாய் மேல் நீதிமன்றத்தில் முன் வைத்துள்ளதாக அறிய முடிகின்றது. 

இந்த நிலையில் அது தொடர்பில் தீர்மானிக்கும் வரை மாகாந்துரே மதூஷ்  நாடு கடத்தப்பட வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளதாக டுபாய் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டுபாயில் தனக்கு உள்ள சொத்துக்கள், அங்கு தான் பார்த்த வேலைகள், துபாயின் பொருளாதாரத்துக்கு தான் வழங்கும் பங்களிப்பு மற்றும் இலங்கையில் தனக்கு உள்ள உயிர் அச்சுறுத்தல் ஆகியவற்றை மையப்பபடுத்தியே அவர் இந்த மே முறையீட்டை தாக்கல் செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் மாகந்துரே மதூஷின் சகாக்கள் என சந்தேகிக்கப்படும் அவருடன் கைதுசெய்யப்பட்ட மொஹம்மட் சித்திக் மொஹம்மட் சியாம் மற்றும் லங்கா சஜித பெரேரா ஆகியோர்  நேற்று டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

மற்றொருவர் தொடர்பில் தீர்மானமெடுக்க சி.சி.டி.எனப்டும் கொழும்பு குற்றத்தடுப்புய்ப் பிரிவு  விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.  இந்த நிலையில் ஆயுதத்தைக் காட்டி ஒருவரை அச்சுறுத்திய விவகாரத்தில்,  லங்கா சஜித பெரேரா எனும் மதுஷின் சாகா சி.ஐ.டியினரால் மாத்தறை நீதிமன்ற கைது உத்தரவொன்றுக்கு அமைய கைது செய்யப்பட்டிருந்தார். 

அவர் நேற்று நீர் கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது அவருக்கு பிணையளித்துள்ள நீதிமன்றம் இன்று அவரை மாத்தறை நீதிமன்றில் கைது உத்தரவு தொடர்பில் ஆஜராகுமாறு கட்டளை பிறப்பித்தது. 

இந்த நிலையில் நாடு கடத்தப்பட்ட மொஹம்மட் சித்திக் மொஹம்மட் சியாம்  தொடர்பில் சி.சி.டி. மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவர் இன்று காலை விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31