சிறைச்சாலைகளில் போதைப்பொருள் உள்ளிட்டவைகளைக் கட்டுப்படுத்தப்படுமாக இருந்தால் நாட்டில் 75 வீதமான குற்றச்செயல்களைத் தடுக்க முடியும் என யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதமர் சிறை காவலர் என். பிரபாகரன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஏப்ரல் 3 போதையற்ற நாடு எனும் தொனிப்பொருளிளான சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய போதே யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பிரதம காவலர் என்.பிரபாகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்
.
“நாம் இன்றைய தினம் போதைப் பொருளை ஒழிப்போம் போதை பொருளை கட்டுப்படுத்துவோம் என்னும் தொனிப்பொருளில் சத்தியபிரமாணத்தை மேற்கொண்டுள்ளோம். எனினும் அந்த சத்திய பிரமாணத்தை வாயளவில் நாங்கள் உச்சரித்துவிட்டு செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
எனவே நாம் சிறைச்சாலைக்குள் இந்த போதை பொருளை ஒழிப்போமாக இருந்தால் நாட்டில் 75 வீதமான குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என நான் நம்புகின்றேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வானது யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் உதவி அதியட்சகர் எம்.எல்.மலின் லோவின் ஆலோசனையில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்ச்கர் எம்.எப்.லாகீரின் வழிகாட்டலில் யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதான காவலர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM