பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில் கடந்த 14ம் திகதி பிறந்த 45 நாள் சிசுவை தாக்கி விட்டு தலைமறைவாகியிருந்த தந்தையை நேற்று மாலை கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த 14ம் மது போதையில் வந்து தகாத வார்த்தைகளால் பேசி தன்னையும் தனது சிசுவையும் கடுமையாக தாக்கிவிட்டு தலைமறைவாகியிருந்ததாக சந்தேகநபரின் மனைவி கடந்த 15ம் திகதி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
தாக்கப்பட்ட சிசுவும் தாயும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM